Saturday, 12 October 2013

பரனே திருக்கடைக்கண் பாராயோ


பரனே திருக்கடைக்கண் பாராயோ - எந்தன்
பாவத்துய ரனைத்தும் தீராயோ
பரனே பரனே பரனே பரனே (2)

ஸ்திரமில்லாத எனை முனையாமல் - நான்
செய்த குற்றம் ஒன்றும் நினையாமல் (2)
பரனே பரனே பரனே பரனே (2)

மாய வலையில் பட்டு சிக்காமல் - லோக
வாழ்வில் மயங்கி மனம் புக்காமல் (2)
பரனே பரனே பரனே பரனே (2)

அடியேனுக் கருள்செய் இப்போது - உன(உந்தன்)
தடிமைக் குனையன்றி கதியேது
பரனே பரனே பரனே பரனே (2)

வேதநாயக வானன் பாட்டுகென்றே
மேன்மையான தயவைக் காட்டே (2)
பரனே பரனே பரனே பரனே (2)

0 comments:

Post a Comment