மத்தேயு 7:15
"கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு
எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில்
வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்."
இது, கர்த்தராகிய இயேசு
கிறிஸ்துவின் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தையாகும்.
தன்னைத் தானே தேவனுடைய தீர்க்கதரிசி என பறைசாற்றிக் கொள்ளும் ஓர் நபரின்
விளம்பரத்தினைப் பாருங்கள்.
1.‘ உலகம் முழுவதும் தேவனால் பயன்படுத்தபடும் தேவனுடைய தீர்க்கதரிசி’ என்பதை - “ உலகை ஆளும்
அதிபதியான அதிபதியான சாத்தான் என்கிற தீய சக்தியுடைய தேவனால் பயன்படுத்தப்படும்
சாத்தானின் விசுவாசி எனவும் எடுத்துக் கொள்ளலாம்.
2. ‘இவர் இயேசுவை முகமுகமாய் சந்தித்து பேசும் அற்புதமான தீர்க்கதரிசி’ – எப்படி இது
சாத்தியம் ?. SKYPE வழியாகவா ? வேறு விதமான Online Video Chat வழியாகவா ? அல்லது
High End 3G Network உள்ள மொபைல் ஃபோன் வழியாகவா ?.
3. ‘ உங்கள் முகத்தை பார்த்த உடனேயே தேவனின்
திட்டத்தை உங்களுக்கு வெளிப்படுத்தம் ஆற்றல் கொண்டவர் ‘ – தான் ஒரு குறி சொல்லுபவர் என்கிறார்.
தானும் இவர்களுக்கு சளைத்தவர் அல்ல...என சொல்கிறார்.
4. இறுதியாக, ஒரே ஒரு தீர்க்கதரிசன வார்த்தை....... !உங்கள் வாழ்க்கையையே
மாற்றிவிடும்.....! – இது கூட ஐடியா செல்லுலார் நிறுவனத்தின்
விளம்பரத்திலிருந்து திருடப்பட்டதுதான்..
இவருக்கும், இப்படி பட்டவர்களைக்குறித்தும், என்னைப் போன்ற பல கிறித்துவர்களின் மனதில் வேதனையுடன் தோன்றும் கேள்வி – இந்த பொழப்புக்கு ............... ?
- Parthasarathi Boaz




0 comments:
Post a Comment