Saturday, 12 October 2013

தரும சாகரா குமாரா

தரும சாகரா குமாரா
தந்தையே சரு வேஸ்வரா
அன்பனே கிறிஸ்தய்யா
எம்பரா அருள் தயாபரா

 செய்தேன் குற்றம் கோடியே
தெய்வத்தை விட் டோடியே
மெலிந்த என்னையும் சகாயா
நெகிழா தென்னைத் தேற்றையா - அன்பனே

 கயவனில் நான் கயவனே
கடையனே மா கபடனே
கசட னென்னையும் ஐங்காயா
கனிவுடன் கண் நோக்கையா - அன்பனே

 
பொல்லா ஜென்மம் நானல்லோ
சொல்லால் கூற லாகுமோ
கொல்லா தென்னையும் உபாயா
கொண்ட ரேதும் கூறய்யா - அன்பனே

0 comments:

Post a Comment