Saturday, 12 October 2013

சிந்தனைப் படாதே நெஞ்சமே


சிந்தனைப் படாதே நெஞ்சமே - உனை
இரட்சிக்க தேவ சுதன் இருக்கின்றார்
          அந்தியும் சந்தியுமாக யார்
          பகை செய்தாலு மென்ன
          எந்த வினை வந்தும் ரோமம்
          எண்ணப் பட்டி ருக்கையிலே - சிந்தனை

ஐந்து சிட்டு ரெண்டு காச தாக
விற்றும் அங்கத்திலே ஒன்றும்
கறையில் விழாத உத்தமன்
உறைத் திருக்க      
          முந்தியில் விசாரமுடன்
          போக்கிட மற்றவர் போலே
          சந்தே கத்தினால் உழன்று
          தவித்து தவித்துக் கொண்டீர் - சிந்தனை

என்ன புசிப்போம் குடிப்போம்
என்ன உடுப்போம் எனவே
பண்ண விசாரங்கள் கோடி
பண்ணினோம் எண்ணத் தினாலே
          உன்ன ளவுக்கு அதிக - ஓர்
          முழத்தை யுண்டாக்க நீயார்
          கன்னி வயிற்றில் சமைத்த
          ஆண்டவன் செத்து போனாரோ - சிந்தனை

திக்கெல்லாம் புகழும் ஏகச்
சக்ராதி பனுக் கன்பான
தக்கன தேவ சகாயன்
சற்குணத் துதித்த சேயன்
          முக்கிய வேத நாயகன்
          நற்கலை பாதஞ் சொல்வாயுன்
          துக்க சஞ்சலங் களோடும்
   எக் கருமமும் கை கூடும் - சிந்தனை

0 comments:

Post a Comment