நம்பிவந்தேன் மேசியா, நான் நம்பிவந்தேனே-
திவ்ய
சரணம்
சரணம் சரணம் ஐயா, நம்பிவந்தேனே
தம்பிரான்
ஒருவனே, தம்பமே தருவனே - வரு
தவீதுக்
குமரகுரு பரமனுவேலே, நம்பிவந்தேனே - நான்
நின்பாத
தரிசனம், அன்பான கரிசனம் - நித
நிதசரி
தொழுவதிதம் எனவும்உறுதியில், நம்பி வந்தேனே
- நான்
நாதனே
கிருபைகூர், வேதனே சிறுமைதீர் - அதி
நலம்
மிகும் உனதிரு திருவடி அருளே நம்பி வந்தேனே - நான்
பாவியில்
பாவியே, கோவியில் கோவியே - கன
பரிவுடன்
அருள்புரி அகல விடாதே, நம்பி வந்தேனே - நான்
ஆதி
ஓலோலமே, பாதுகா காலமே - உன
தடிமைகள்
படுதுயர் அவதிகள் மெத்த, நம்பி வந்தேனே - நான்
0 comments:
Post a Comment